Reading Time: < 1 minute
Tamil Business Directory
சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலார்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
இதேவேளை வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.




