Reading Time: < 1 minute

கனடாவில் பேருந்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹலிபெக்ஸில் கடந்த 2ஆம் திகதி பேருந்தில் ஏறிய இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் பயணி ஒருவரை வம்பிழுத்தனர்.

மேலும், இரண்டு பேரில் ஒருவர் பேருந்து சாரதியை தாக்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.