Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்றதேர்தலில் பார்தி கந்தவேள் என்பவர் வெற்றியீட்டியுள்ளார்.

ஸகாப்ரோ தென்மேற்கு நகராட்சி இடைத் தேர்தலில் அவர் இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார்.

பார்தி கந்தவேள் 4641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பார்தி, ரொறன்ரோ பாடசாலை சபையின் பொறுப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத் தேர்தலில் பார்தியை எதிர்த்து போட்டியிட்ட கெவின் ரூபசிங்க என்வர் 3854 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகராட்சி மன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்த கெரி க்ராபொர்ட் பதவியை ராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பார்தி வெற்றியீட்டியுள்ளார்.

பார்தி ஓர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.