Reading Time: < 1 minute

வின்ட்சர்-எசெக்ஸ் மற்றும் சாதம்-கென்ட் ஆகிய பகுதிகளுக்கு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் குளிர்கால புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

‘டெக்சாஸ் லோ’வில் இருந்து வரும் குளிர்கால புயல் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதியை பாதிக்கக்கூடும் என்று கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது.

நாளை (புதன்கிழமை) காலை நேரங்களில் தென்மேற்கு ஒன்ராறியோவில் பனி பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மொத்த பனிப்பொழிவு அளவு வியாழக்கிழமை காலை 10 முதல் 25 செ.மீ வரை இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.