Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோ, பீல் மற்றும் யோர்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் வரக்கூடும் என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
குடியிருப்பாளர்கள் எதை எதிர்பார்க்க முடியும் என்பதைப் பற்றி அவர் முழு விபரங்களைத் தரவில்லை என்றாலும், நாங்கள் மற்றொரு முடக்கதிற்குச் செல்ல வேண்டி வரலாம் என்றும் கூறினார்.
புதிய நடவடிக்கைகள் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.




