Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் 325 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ரொறன்ரோ பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

நடப்பு ஆண்டிலிருந்து கடந்த 23ஆம் திகதி வரையிலான தரவுகளை கொண்டே, இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ரொறன்ரோ நகரில் பதிவாகியுள்ள 325 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், காயமடைந்த 484 பேரில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.