Reading Time: < 1 minute
Tamil Business Directory
சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் லண்டன் பகுதியில் வைத்து நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பயணித்த காரினை சோதனைக்கு உட்படுத்தியபோது போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே குறித்த காரில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




