Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில், உடற்பயிற்சி நிலையங்களின் பெண்கள் ஆடை மாற்றுமறைகளில் இடம்பெற்றுவரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Business Directory

Prince George RCMP வெளியிட்டுள்ள தகவலின்படி, உள்ளூர் fitness centre-களில் பெண்களின் கைப்பைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் குறிவைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

சில சம்பவங்களில் பைகள் ஆடை மாற்றுமறைகளில் வெளிப்படையாக வைக்கப்பட்டிருந்ததாகவும், மற்றொரு சம்பவத்தில் பொருட்கள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தாலும் அது முறையாக பூட்டப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பணப்பைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் திருடப்பட்டதுடன், இரண்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பைகளில் இருந்த சாவிகளைப் பயன்படுத்தி அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் இருந்த கார்களும் திருடப்பட்டுள்ளன.

“இவை திட்டமிட்ட குற்றச் செயல்கள். சந்தேக நபர்கள் தாங்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதையும், அவற்றை எவ்வாறு அணுகுவது என்பதையும் நன்கு அறிந்திருக்கின்றனர். பொருட்கள் கவனிக்கப்படாமல் இருக்கும் சிறு நேரத்திலேயே திருட்டுகள் விரைவாக நடைபெறுகின்றன,” என Prince George RCMP ஊடக தொடர்பு அதிகாரி Corporal Jennifer Cooper தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொதுவான ஆடை மாற்றுமறைகள் உள்ள இடங்களைப் பயன்படுத்துவோர், பணப்பை, கைப்பை, வாகனச் சாவி, அடையாள அட்டைகள் மற்றும் வங்கி அட்டைகள் போன்ற முக்கிய பொருட்களை பாதுகாப்பாக லாக்கரில் வைத்து முறையாக பூட்ட வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டும் இதுவரை புகார் அளிக்காதவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை அடையாளம் காணவும், இதுபோன்ற சம்பவங்களில் ஏதேனும் தொடர்புடைய முறை அல்லது வலைப்பின்னல் உள்ளதா என்பதை கண்டறியவும் பொதுமக்களின் தகவல்கள் மிகவும் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.