Reading Time: < 1 minute

கனடாவின் தேசிய பொலிஸ் படை உட்பட நாட்டை நிர்வகிக்கும் அனைத்து அமைப்புகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மை கனடாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இனவெறி எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வேண்டுமென்றே அல்லது ஆக்கிரமிப்பு செயல்களின் மூலம் வெளிப்படுத்தப்படாவிட்டாலும், அமைப்புவடிவ இனவெறி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நுட்பமாக உள்ளது.

அமைப்புவடிவ இனவெறி என்பது நாடு முழுவதும், பொலிஸார் உட்பட எங்கள் அனைத்து பொலிஸ் படைகள் உட்பட, நம் அனைத்து நிறுவனங்களிலும் ஒரு பிரச்சினையாகும்

கடந்த தலைமுறைகளாக நாம் கட்டமைத்துள்ள அமைப்புகள் எப்போதுமே இனரீதியான பின்னணியிலான, பழங்குடி பின்னணியிலான மக்களை நியாயமான முறையில் நடத்துவதில்லை என்பதை அங்கீகரிக்கிறது’ என கூறினார்.