Reading Time: < 1 minute

சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான அரிய கண்டு பிடிப்பு ஒன்றை கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

விபத்துக்கள் மூலமாக ஆண்டு தோறும் சுமார் ஒரு மில்லியன் சிறுவர் சிறுமியர் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விபத்துக்களினால் ஏற்படக்கூடிய மரணங்களை வரையறுக்கும் நோக்கில் கனடிய மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

மெய்நிகர் தொழில்நுட்பம்
மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றை மொன்றியல் மருத்துவர்கள் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த தெரழில்நுட்பத்தை மருத்துவர்களுக்கு பயிற்றுவிப்பதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காக்க முடியும் என மருத்துவா ஆய்வாளாகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆண்டு தோறும் வாகன விபத்துக்கள், விழுதல், தீ விபத்துக்கள் உள்ளிட்ட விபத்துக்கள் மூலம் பெருமளவு சிறுவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

PeTIT VR என்ற இந்த மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக தொலை தூரத்தில் இருந்துகொண்டு விபத்துக்களினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மருத்துவ உதவியாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய தொழில்நுட்பம் தற்பொழுது பரீட்சார்த்த மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.