Reading Time: < 1 minute

வாடிக்கையாளர்கள் பயணிப்பதை எளிதாக்கும் நோக்கில் கொரோனா சுய பரிசோதனை திட்டத்தை ஏர் கனடா அறிமுகப்படுத்துகிறது.

Tamil Business Directory

அதன்படி வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு திரும்பும் பயணிகள் ஏர் கனடா விமானங்களில் பயணிப்பதற்கு முன்னர் தாங்களாகவே கொரோனா சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்விட்ச் ஹெல்த் என்ற திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் பயணிகள் சுய பரிசோதனை செய்து 45 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவின் மின்னணு அறிக்கையைப் பெறலாம்.

கனடா அரசாங்கத்தின் சோதனை நுழைவுத் தேவைகளைப் இந்த பரிசோதனையானது பூர்த்தி செய்யும்.

தற்போது, ​​கனடாவுக்கு விமானத்தில் பறக்கும் பயணிகள் விமானத்தில் பயணிக்கும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.