Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால் அதிகளவானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்போது நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

ஒன்றாறியோ பொது சுகாதார அலுவலகம் இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வருடத்தில் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப்பை பிரச்சினைகள் இந்த நோயினால் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நிமோனியா காய்ச்சலை விடவும் இந்த நோய் ஆபத்து குறைந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோய் பாக்டீரியா தாக்கத்தினால் ஏற்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.