Reading Time: < 1 minute

கனடாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்கள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடனாவில் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் சிலரே இந்த அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாணவர் வீசாவில் கனடாவிற்குள் பிரவேசித்த சிலரே இவ்வாறு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்திய குடிவரவு முகவர்களினால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தம்மை கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியாது எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

2021ம் ஆண்டு முதல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடனாவிற்கு சென்ற மாணவர்கள் பலர் இவ்வாறு நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்குகின்றனர்.