Reading Time: < 1 minute

கனடாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு, மே மாதத்திற்கு பிறகு உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி, வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 6,444பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஆறாயிரத்து 644பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 96ஆயிரத்து 257பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 918பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 31ஆயிரத்து 096பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 38ஆயிரத்து 243பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.