Reading Time: < 1 minute

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

டொரண்டோ வெளிநாடுகளில் இந்தியர்கள், இந்திய வம்சாவளியின் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் இந்து மத வழிபாட்டு தலங்கள் மீதும் தாங்கள் அரங்கேறி வருகிறது.

குறிப்பாக, கனடாவில் இந்து மதத்தினர், இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது.

சீக்கியர்கள் அதிகமுள்ள கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

அவர்கள் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் மிசிசுகா நகரில் உள்ள இந்து மத வழிபாட்டுதலமான ராமர் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.

மத வழிபாட்டு தலத்திற்கு வெளியே உள்ள சுவற்றில் இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராகவும் கொல்லபட்ட காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிக்கு ஆதரவான கருத்துக்களும் எழுதப்பட்டிருந்தன.

இந்து மத வழிபாட்டுதல சுவற்றில், மோடியை பயங்கரவாதியாக அறிவியுங்கள் (பிபிசி), இந்தியா ஒழிக, பிஹிந்திரவாலி ஒரு போராளி என்று எழுதப்பட்டிருந்தது.

பிஹிந்திரவாலி கடந்த 1984-ம் ஆண்டில் ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கையில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.