Reading Time: < 1 minute

இந்தியா மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

Tamil Business Directory

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சூரிய சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதி, IPL மற்றும் லங்கா பே ஆகியவற்றுக்கு இடையேயான நெட்வொர்க் டு நெட்வொர்க் ஒப்பந்தம், UPI விண்ணப்ப ஏற்பு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ஒப்பந்தங்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், இந்த குறிப்பிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.