Reading Time: < 1 minute

கனடாவில் மீனவர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார்.

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவின் மெரால் சியாசன் என்ற மீனவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணத்தை வென்றெடுத்துள்ளார்.

இந்த லொத்தர் சீட்டு காலாவதியாக இன்னமும் 19 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி இந்த லொத்தர் சீட்டுக்கான சீட்லுப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஏனைய லொத்தர் சீட்டுக்களைப் போன்றே இந்த லொத்தர் சீட்டையும் தாம் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பெருந்தொகை பணப்பரிசு வென்றெடுக்கப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்று உரிமை கோரப்படவில்லை என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

லொத்தர் சீட்டு காலாவதியாக சில நாட்களுக்கு முன்னர் கிடைத்த அதிர்ஸ்டம்
கடந்த நாற்பது ஆண்டுகளாக மீன்பிடியில் ஈடுபட்டு வந்த தமக்கு இந்த லொத்தர் சீட்டிலுப்பு வெற்றி பெரு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கு முன்னதாக கொள்வனவு செய்யப்பட்டு காலாவதியாக சில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் பரிசுத் தொகை வென்றெடுக்க கிட்டியமை இந்த மீனவரின் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பு முனையாகவே கருதப்பட வேண்டும்.