Reading Time: < 1 minute

ஜூலை மாதம் 8ஆம் திகதி கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ள ஒரு தாய்க்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் முதலானோர் பேரணிகளில் இறங்கியுள்ளார்கள்.

Tamil Business Directory

Evangeline Cayanan என்ற பெண் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நாடுகடத்தப்பட உள்ள நிலையில், அவரது மகளும் கனேடிய குடிமகளுமான McKenna (6), தனக்கு கனடாவில் யாரும் இல்லாததால் தாயுடன் கனடாவை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

2010ஆம் ஆண்டு Evangeline தற்காலிக வெளிநாட்டுப் பணியாளராக கனடாவுக்கு வந்துள்ளார். அவர் பணி செய்யும்போது தனக்கு பணி வழங்கிய இருவர் தன்னை துன்புறுத்தியதாகவும், பாரபட்சமாக நடத்தியதாகவும் புகார் செய்திருந்தார்.

அதற்கு பழிவாங்குவதற்காக அவர்கள் Evangeline மீது திருட்டுப் பழி போட்டதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், அந்த திருட்டு நடந்ததாக கூறப்படும்போது தான் கனடாவிலேயே இல்லை என்கிறார் அவர்.

ஆக, Evangeline தனது பணி அனுமதியை இழந்திருக்கிறார். அவரால் அகதி நிலை கோரி விண்ணப்பிக்கவும் முடியாத ஒரு நிலை, 2015இல் அவர் ஆவணங்களற்றவர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

அதே வருடத்தில் McKenna பிறக்க, அவர் கனடாவில் பிறந்ததால் கனேடிய குடிமகளாகிவிட்டார்.