Reading Time: < 1 minute

கனடாவின் லண்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

நேற்று(வியாழக்கிழமை) காலை இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது 64 வயதான லறி ரெனோல்ட் மற்றும் 62 வயதான லின் வான்எவர் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கனடாவில் அண்மைக்காலமாகவே இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.