Reading Time: < 1 minute

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளின் மத்தியில், முன்னாள் இளவரசர் அன்ட்றுவின் அரச அரியணைக்கான வாரிசு உரிமை நீக்கப்பட வேண்டும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

ஜப்பானின் டோக்கியோ நகரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோது, இந்த விவகாரம் குறித்து நேரடியாக கேட்கப்பட்டதற்கு “தனிப்பட்ட முறையில் நான் அதனை ஆதரிக்கிறேன்” என கார்னி பதிலளித்தார்.

முன்னதாக இளவரசர் அன்ட்றூ என அழைக்கப்பட்ட அன்ட்றூ பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின்சகோதரர் ஆவார்.

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட மறைந்த அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீனுடனான அவரது நீண்டகால தொடர்பு காரணமாக பல ஆண்டுகளாக கடும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

கடந்த மாதம், பொதுப் பணியில் தவறான நடத்தை குறித்த சந்தேகத்தின் பேரில் அன்ட்றூ கைது செய்யப்பட்டு பின்னர் குற்றச்சாட்டு இன்றி விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

2001 முதல் 2011 வரை பிரித்தானியாவின் வர்த்தக தூதராக பணியாற்றிய காலத்தில் அவர் எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை பகிர்ந்தாரா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் அவரிடமிருந்து அரச பட்டம் நீக்கப்பட்டது.

தற்போது 66 வயதான அவர் இன்னும் பிரித்தானிய அரச அரியணைக்கான வாரிசு பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். அவர் இளவரசர் ஹரியின் குழந்தைகளுக்குப் பின்னர் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அன்ட்றூ தொடர்ந்து மறுத்து வருகிறார்.

அன்ட்றூவின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. அதனால் அவரிடமிருந்து அரச பட்டம் நீக்கப்பட்டதாக நான் கருதுகிறேன். இருப்பினும் இதற்கான ஒரு நடைமுறை உள்ளது” என கார்னி தெரிவித்துள்ளார்.

அன்ட்றுவை அரச வாரிசுத் தொடரிலிருந்து நீக்கும் சாத்தியக்கூறுகளை தற்போது பிரித்தானிய அரசு ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.