Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறொன்ரோவில் வசிப்பவர்கள் நகரத்தின் தற்போதைய கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்க பிக்கரிங்கிற்கு வருவது கவலை அளிப்பதாக பிக்கரிங் மேயர் டேவ் ரியான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சாதாரண சூழ்நிலைகளில், எங்கள் கதவுகள் சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் கடைகள் மற்றும் பிக்கரிங்கின் உணவகங்களை அனுபவிக்கும் பார்வையாளர்களுக்கும் திறந்திருக்கும்.
ஆனால், இப்போது தொற்றுநோய்களின் போது அல்ல் நாங்கள் எங்கள் சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.
மக்கள் மண்டலங்களுக்கு இடையில் பயணிப்பதைத் தடுக்க உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்’ என கூறினார்.




