Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

நகரின் மேற்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயிற்றுப் பகுதியிலும், காலிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், சம்பவத்தில் காயமடைந்த ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் அதனை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.