மெக்ஸிக்கோ பாதுகாப்பு நிலைமையை கனடா நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் நிலவும் கடுமையான பதற்ற நிலை குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜலிஸ்கோ மாநிலத்தின் ஜலிஸ்கோ பகுதிகளில், குறிப்பாக கவுடலஜாரா மற்றும் பியோட்டேரா வலாட்ரா நகரங்களைச் சுற்றிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து கனடா அரசு “ஆழ்ந்த கவலை” கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள கனடிய குடிமக்களுக்கு தேவையான தூதரக உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“வெளிநாடுகளில் உள்ள கனடியர்களின் பாதுகாப்பும் நலனும் எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். இதன் காரணமாகவே புதுப்பிக்கப்பட்ட பயண அறிவிப்பை வெளியிடுகிறோம்,” என்று அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜலிஸ்கோ மாநிலத்திற்குப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.