Reading Time: < 1 minute

தடுப்பூசி போட மாணவர்களை ஒன்றாரியோ அரசாங்கம் ஊக்குவிப்பதாக ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘உங்களுக்குத் தெரியும். பல இளைஞர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமா, வேண்டாமா என்று பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும்.

பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், அந்த ஒப்புதல் தேவைப்பட்டால், அது அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்படாது’ என அவர் கூறினார்.

12 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசிக்கு ஹெல்த் கனடா ஒப்புதல் அளித்துள்ளது. புதன்கிழமை ஒரு தொழில்நுட்ப மாநாட்டில், ஒன்றாரியோ அரசாங்கம் ஜூன் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்குவதாக அறிவித்தது