Reading Time: < 1 minute
Tamil Business Directory
பெயிரூட் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கல்கரியில் உள்ள அல்பர்ட்டா முஸ்லிம் சமூக சங்கத்துடன் அவாடா தன்னார்வலர்கள், நன்கொடைகளை சேகரித்து வருகின்றனர்.
உணவு, உடை மற்றும் மருத்துவ பொருட்களை அவர்கள் பெறுனர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.
5 மில்லியன் டொலர் வரை மனிதாபிமான உதவிகளை லெபனானுக்கு அனுப்பப்போவதாக கனடா அறிவித்துள்ளது.
புள்ளிவிபர கனடாவின் 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லெபனானில் 10,300க்கும் மேற்பட்ட அல்பர்டான்கள் பிறந்துள்ளனர். அவர்களில், 4,000க்கும் அதிகமானோர் கல்கரியில் வசிக்கின்றனர்.
2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோ காயமடைந்துள்ளனர் மற்றும் 300,000பேர் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.




