Reading Time: < 1 minute

டொரொண்டோ நகரின் மேற்குப் பகுதியில் இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஒரு ரைட்ஷேர் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வெஸ்டன் Weston Road மற்றும் எக்லின்டன் Eglinton Avenue West பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இந்த சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு பெண் பயணிகள் தங்களது பயண துரத்தை நிறைவு செய்து வாகனத்திலிருந்து இறங்கிய பின்னர் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஓட்டுநர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்தின் மாடிப் பகுதிக்குள் அவர்களைத் தொடர்ந்து சென்றதாகவும், அங்கேயே இருவரையும் பாலியல் தாக்குதல் செய்துவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.