Reading Time: < 1 minute

அமெரிக்காவுடனான வர்த்தக போர் தொடர்ந்து கூடியுள்ள நிலையில், கனடாவின் மாகாண முதல்வர்கள் சீனாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tamil Business Directory

ஹன்ட்ஸ்வில்லே, ஒன்டாரியோவில் நடைபெற்ற “Council of the Federation” மாநாட்டின் இறுதிநாளான இன்று, மாகாண முதல்வர்கள் ஒன்றாக கூடி இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

சஸ்காச்சுவான் முதல்வர் ஸ்காட் மோ மற்றும் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், இருவரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு எதிராக, கனடா சீனாவுடன் உறவை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

“அமெரிக்கா மீது நமது சார்பை குறைக்க விரும்புகிறோம் என்றால், புதிய உற்பத்தி பொருட்கள் வழியாகவே அதைச் செய்ய முடியும். அதற்காக நாம் சீனாவுடன் உறவை விரிவுபடுத்த வேண்டும்,” என ஸ்காட் மோ கூறியுள்ளார்.

அமெரிக்கா விதித்த உருக்கு வரிகள் மற்றும் சீனாவின் மறைமுக உற்பத்தி தள்ளுபடி காரணமாக, மாகாணங்களுக்குள் உள்ள முக்கிய உருக்கு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வின்ஸ்டன் சேர்ச்சில் “Churchill கூறியது போல, நம்முடைய எதிரியின் எதிரி நம்முடைய நண்பன். நான் அமெரிக்காவை எதிரி என்று நினைப்பதில்லை. ஆனால், தற்போது ஜனாதிபதி டிரம்ப் தன்னைத் தான் எதிரியாக நடத்திக்கொள்கிறார்,” என ஃபோர்ட் விமர்சித்துள்ளார்.

ஒன்டாரியோ மாநிலம் மட்டும் வருடத்திற்கு $40 பில்லியன் மதிப்புள்ள சீன பொருட்களை இறக்குமதி செய்கிறது, ஆனால் வெறும் $3 பில்லியன் மதிப்பேற்றும் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.