Reading Time: < 1 minute

காலேடன் மற்றும் பிராம்ப்டனில் பெருமளவான போதைப் பொருள் வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஒன்றாரியோ மாகாண வீதிக் குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

காலேடனில் மூன்று வீடுகளையும், பிராம்ப்டனில் இரண்டு வீடுகளிலும் பொலிஸார் சோதனை செய்த போது, இரண்டு வாகனங்கள், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் மற்றும் பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இதன்போது அரை மில்லியன் டொலர் பணத்தை பறிமுதல் செய்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது, பிராம்ப்டனைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மீதும், காலெடனைச் சேர்ந்த ஒரு ஆண், பெண் மீதும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.