Reading Time: < 1 minute

கல்கரியில் சிலர் மீது கத்தி குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கல்கரியில் நடைபெற்ற ஸ்டெம்பெட் கலாச்சார நிகழ்வில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கத்தி குத்து தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

சம்பவத்துடன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.