Reading Time: < 1 minute

கனடாவின் கல்கரி நகரில் எதிர்வரும் 2022 முதல் சொத்து வரி அதிகரிக்கப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

இதனால் பொதுவான குடியிருப்பு ஒன்றிற்கு மாதம் 6.20 டொலர் அதிகமாக வரி செலுத்த நேரிடும். சொத்து வரியில் சுமார் 3.87% அதிகரித்துள்ள நிலையில், பொதுவாக 457,900 டொலர் மதிப்பிலான ஒரு குடியிருப்பு ஒன்றிற்கு ஆண்டுக்கு 65 முதல் 88 டொலர் வரையில் அதிகமாக வரி செலுத்த வேண்டும்.

நகரத்தின் வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் விளைவாக இந்த அதிகரிப்புகள் வந்துள்ளன. நகரின் காலநிலை தொடர்பான திட்டங்களுக்கு 3 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் புதிய ஊழியர்களை உட்படுத்துவது, தற்போதுள்ள 75கும் மேற்பட்ட நகர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுதல் உள்ளிட்டவை அடங்கும் என்றே மேயர் ஜோதி(Jyoti Gondek) தெரிவித்துள்ளார்.

நாம் செய்யும் முதலீடுகள், மீட்புக்கான நமது பாதையில் உண்மையான ஈவுத்தொகையைக் கொடுக்கும். கல்கரி மக்கள் தங்களுடைய நகரத்தில் அவர்கள் செய்த முதலீட்டை திரும்பப் பெறத் தகுதியானவர்கள், இன்று நாங்கள் அதை வழங்கியுள்ளோம் என்கிறார் மேயர் ஜோதி.

ஒரு மில்லியன் சதுர அடிக்கு மேல் காலியாக உள்ள அலுவலக கட்டிடங்களை குடியிருப்புகளாக மாற்ற டெவலப்பர்களை ஈர்க்க மற்றொரு $55 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்கரி நகருக்கென 56 தீயணைப்பு வீரர்களை பணிக்கு அமர்ந்தும் பொருட்டு தனியாக 10 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி காவல்துறையில் புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் பொருட்டு 6 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.