Reading Time: < 1 minute

சீனாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டாவது நபர் மீது பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணை தொடங்கியது.

இந்த விசாரணை நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்ற அடிப்படையில், மூடப்பட்ட அறைக்குள் நடத்தப்பட்டது.

இதுகுறித்து தலைநகர் ஒட்டாவாவில் கருத்து தெரிவித்த பிரதமர், ‘கனடா நாட்டினரை தன்னிச்சையாக சீனா கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் மீதான வழக்கு விசாரணையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை’ என கூறினார்.

இதுகுறித்து கனடா தூதரக துணைத் தூதர் ஜிம் நிகெல் கூறுகையில், ‘அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 26க்கும் அதிகமான நாடுகள் அவர்களின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன’ என கூறினார்.

அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், சீனாவின் ஹூவாய் நிறுவன அதிகாரி மெங்க் வான்ஜோவை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கனடா கைது செய்தது. இதற்கு பழிவாங்கும் வகையில், அடுத்த இரண்டு நாள்களிலேயே பெய்ஜிங்கில் வசித்து வரும் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவிர்ஜ், டன்டோங்கில் வசித்து வந்த கனடாவைச் சேர்ந்த தொழில்முனைவோர் மைக்கேல் ஸ்பாவோர் ஆகிய இருவரை உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீனா கைது செய்தது.