Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ நகர வீதிகளில் படுத்துறங்கும் அகதிகளுக்கு உதவுவதாக தொழிலதிபர் ஒருவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

Tamil Business Directory

மொஹமட் ஃபகாய் என்ற தொழிலபதிரே இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

வீதிகளில் தங்கியிருக்கும் அகதிக் கோரிக்கையாளர்களுக்கு வீடு ஒன்றுக்கான வாடகை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பராமவுன்ட் ஃபைன் ஃபூட்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரான மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 20000 டொலர்களை நன்கொடையாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அகதி நல ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் இந்த அகதிகளுக்கான வீடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீட்டுக்கான வாடகைக் கொடுப்பனவை தொழிலதிபர் மொஹமட் வழங்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.