Reading Time: < 1 minute

கனடாவின் கியூபிக் மாகாணத்தில் மருத்துவர்களுக்கு தங்களது சேவை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடிய கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மாகாணத்தினால் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டு கால பகுதி சேவையை, கியூபிக் பொதுச் சுகாதார வலயமைப்பில் வழங்கத் தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நிபந்தனையை பூர்த்தி செய்யத் தவறும் மருத்துவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் டாலர் அபராதத்தை செலுத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கால நிபந்தனையை பூர்த்தி செய்ய முன்னதாக தனியார் துறையில் அல்லது மாகாணத்திற்கு வெளியில் மருத்துவ சேவையை வழங்கினால் அவர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவர் ஒருவரை பயிற்றுவிப்பதற்காக மாகாண அரசாங்கம் சுமார் நான்கரை லட்சம் டாலர்களை செலவிடுவதாகவும் வதிவிடத்திற்காக சுமார் 8 லட்சம் டாலர்களை செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மக்களின் பணத்தை கொண்டு கற்றவர்கள் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டியது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.