Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் ஒரு பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்பைன் பகுதியில் குறித்த வீரர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் குழுவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, விமானி ஒரு பனிச்சரிவைக் கவனித்து சைரனை ஒலித்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த வீரர்களை மீட்பதற்கான துரித நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலியானவர்கள் விஸ்லர் BC-யைச் சேர்ந்த 44 வயது நபர், இடாஹோ USA-வைச் சேர்ந்த 45 வயது நபர் மற்றும் காஸ்லோ BC-யைச் சேர்ந்த 53 வயது வழிகாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.




