Reading Time: < 1 minute

கனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Tamil Business Directory

இந்த களவு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆறு பேரை யோர்க் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்க ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் இந்த நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

பொருட்களை இழந்தவர்கள் அடையாளத்தை உறுதி செய்து பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வோகன் பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.