Reading Time: < 1 minute

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், எரிபொருள் விலை இந்த வாரம் லிட்டருக்கு 2 டொலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Business Directory

இதனால் கார் பயணங்களுடன் விமான பயணங்களும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் பகுதியில் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், உலகளவில் எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன.

அதிகரிக்கும் செலவுகள்
ட்ரூடோ விமான நிலையம் பகுதியில் பயணிகள் செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.

“விமான டிக்கெட் விலை அதிகமாக உள்ளது, ஆனால் அதை ஏற்க வேண்டியதே” என சிலர் தெரிவித்தனர்.

ஜான் கிரடெக் கூறுகையில், “கார் எரிபொருள் லிட்டருக்கு 40–50 சென்ட் வரை உயர்ந்துள்ளது; விமான எரிபொருள் விலை இரட்டிப்பாகியுள்ளது” என்றார்.

இதன் தாக்கமாக போர்டர் ஏர்லைன்ஸ் சில விமான டிக்கெட்டுகளுக்கு 40 டொலர் வரை எரிபொருள் கட்டணத்தை அறவிடத் தொடங்கியுள்ளது.

இது தற்காலிக நடவடிக்கை என நிறுவனம் தெரிவித்தாலும், இதுபோன்ற கட்டணங்கள் நிரந்தரமாகிவிடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மொன்றியலில் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் விலை ஏற்கனவே 1.93 டொலர் வரை உயர்ந்துள்ளது. டேன் மெக்டீக் கூறுகையில், “அடுத்த 24–48 மணிநேரங்களில் 2 டொலரை கடக்க வாய்ப்பு அதிகம்” என்றார்.

மேலும், ஏப்ரல் 15 முதல் குளிர்கால எரிபொருள் கலவையிலிருந்து கோடை கலவைக்கு மாற்றம் செய்யப்படுவதால், விலைகள் மேலும் உயரும். அடுத்த இரண்டு வாரங்களில் லிட்டருக்கு 2.10 டொலர் வரை அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், மேலும் பல விமான நிறுவனங்களும் கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

2026 கோடை கால விடுமுறைக்கான விமான டிக்கெட்டுகளை முன்பே பதிவு செய்யாதவர்கள், அதிக செலவை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். “இந்நிலையில் வீட்டிலேயே தங்குவது தான் சிறந்த தேர்வு ஆகலாம்” எனவும் கருத்துகள் வெளியாகின்றன.