Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த பத்து ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த நபர் ஓருவர் மெக்ஸிக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

ஹாமில்டன் மற்றும் வானில் (Vaughan) நடந்த உயர்மட்ட கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த டேனியல் டோமாசெட்டி (Daniel Tomassetti) தற்போது மெக்சிகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச எல்லைகளைத் தாண்டி, பாதாள உலக குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய இந்த வழக்கில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை இணைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்:

  • மே 2017 (ஹாமில்டன்): பிரபல குற்றக் கும்பலைச் சேர்ந்த ஏஞ்சலோ முசிடானோ (Angelo Musitano), வாட்டர்டவுனில் உள்ள அவரது வீட்டின் முன்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • மார்ச் 2017 (வான்): இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் ஒன்றின் வெளியே காரில் அமர்ந்திருந்த மிலா பார்பெரி (Mila Barberi) சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடன் இருந்த காதலர் சாவேரியோ செரானோ காயங்களுடன் உயிர் தப்பினார். மிலா பார்பெரி உண்மையான இலக்கு அல்ல என்றும், தவறுதலாக அவர் சுடப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

2018-ஆம் ஆண்டில் இந்த வழக்கு தொடர்பாக ஜப்ரில் ஹாசன் அப்தல்லா என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம், டேனியல் டோமாசெட்டி மற்றும் மைக்கேல் கட்மோர் ஆகிய இருவர் மீதும் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மெக்ஸிக்கோவில் கைது செய்யப்பட்ட டோமாசெட்டி மீண்டும் கனடாவிற்கு அழைத்து வருவதற்கான (Extradition) சட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.