Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வீட்டு வாடகை 40 வீதத்தினால் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் இவ்வாறு வீட்டு உரிமையாளர்கள் வாடகைத் தொகையை உயர்த்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

வீட்டு வாடகைத் தொகை உயர்த்தப்படாவிட்டால் வீடுகளை விற்பனை செய்ய நேரிடலாம் என தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்களின் இந்த எச்சரிக்கையினால் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வாடகை தொகைகளை உயர்த்த நேரிடுவதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

40 வீத வாடகை அதிகரிப்பினை செலுத்த முடியாதவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவர் என சில வீட்டு உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாரிய தொகையில் வாடகைத் தொகை அதிகரிப்பானது சட்டவிரோதமானதல்ல என தெரிவிக்கப்படுகின்றது.