Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் நோயாளர்களைப் போன்றே, சுகாதாரப் பணியாளர்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதோடு நாள் தோறும் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காத நிலைமை காணப்படுகின்றதாக ரொறன்ரோ பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் தலைவர் கெவின் சுமித் (Kevin Sumith) தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இருப்பதனால் சிகிச்சை வழங்குவதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.