Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் கடந்த ஆண்டு 355,000க்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்ததாக ஒன்ராறியோவின் நிதி கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

நிதி இழப்பீட்டு அதிகாரி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், வேலை இழப்புகள் பதிவின் மிகப் பெரிய வருடாந்திர சரிவைக் இது குறிக்கின்றது என்று கூறுகிறது.

வேலை இழப்புகளுக்கு மேலதிகமாக, 765,000க்கும் மேற்பட்ட ஒன்ராறியோவில் வசிப்பவர்கள் தொற்றுநோயால் குறைவான மணிநேரம் வேலை செய்ததாக அறிக்கை கூறுகிறது.

இளைஞர்களின் வேலையின்மை 22 சதவீதமாக உயர்ந்ததால், இளம் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ- பீட்டர்பரோவில் 13.5 சதவீததும் மற்றும் விண்ட்சர் 10.9 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தன.