Reading Time: < 1 minute

இஸ்ரேலுக்கான அனைத்து வகையான பயணங்களையும் தவிர்க்குமாறு கனடிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நிச்சயமற்ற பாதுகாப்பு நிலமைகளின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.

இஸ்ரேல், மேற்குக்கரை மற்றும் காஸா பரப்பில் வசித்து வரும் கனடியர்கள் தங்களது பயண ஆவணங்களை ஆயத்த நிலையில் வைத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

கனடிய பிரஜைகள் மற்றும் கனடிய நிரந்தர வதிவுரிமையாளர்கள் எந்த நேரத்திலும் அவசரமாக வெளியேறுவதற்கு ஆயத்த நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.