Reading Time: < 1 minute

ஹமில்டனில் இரு தரப்பு குழுக்களுக்கிடையிலான மோதலில், 13வயது மற்றும் 15வயது சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

எனினும், இந்த காயங்கள் உயிராபத்தற்றது என தெரிவித்துள்ள ஹமில்டன் பொலிஸார், இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

14 வயதான தேவன் பிராசி-செல்வி என்ற சிறுவனை, சர் வின்ஸ்டன் சர்ச்சில் மேல்நிலைப் பாடசலைக்கு வெளியே கத்தியால் குத்தப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில், 14வயது மற்றும் 18வயது சிறுவர்கள் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.