Reading Time: < 1 minute

அமெரிக்கா, கனடாவின் நம்பகமான கூட்டாளர் அல்ல என்றும், உலக அமைதிக்கு ரஷ்யாவைவிட பெரிய அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றது என்றும் பல கனேடியர்கள் கருதுகின்றனர் என சமீபத்தில் வெளியான சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Tamil Business Directory

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வு, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 58% கனேடியர்கள், அமெரிக்கா கனடாவின் உண்மையான கூட்டாளி அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோன்ற மனநிலை, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்க குடிமக்களிடையிலும் காணப்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

மேலும், 57% பேர், முக்கியமான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் எழும் நேரங்களில் அமெரிக்காவை முழுமையாக நம்ப முடியாது என தெரிவித்துள்ளனர். அதோடு, மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான கனேடியர்கள், அமெரிக்கா பிற நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக, புதிய பிரச்சினைகளை உருவாக்கும் நாடாக செயல்படுகிறது என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, Donald Trump அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து கனடாவை “அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக” இணைக்கப்போவதாக வெளியிட்ட கருத்துகள் மற்றும் கனடாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் போன்ற நடவடிக்கைகள், அமெரிக்கா குறித்த கனேடியர்களின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்த ஆய்வு, கனடா–அமெரிக்க உறவுகள் குறித்து எதிர்காலத்தில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.