Reading Time: < 1 minute தீவிரவாத தாக்குதல்களை கொண்டாடக்கூடாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் தீவிரவாத தாக்குதல்கள் கொண்டாடப்படுவதனை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வன்முறைகள் போற்றப்படுவதனை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு பேரணிகள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வன்முறைகளை போற்றும் வகையில் எந்த ஒரு குழுவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் செயல்படக்கூடாது என அவர் twitter பதிவு ஒன்றின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் எட்மோன்டன் நகர மேயர் அமர்ஜித் சோய், காஸா – இஸ்ரேல் போர் தொடர்பில் கருத்து வெளியிட்டு சிக்கல் மாட்டிக் கொண்டுள்ளார். மேயர் அமர்ஜித் சோய் வெளியிட்ட கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக எட்மோன்டன் வாழ் யூத சமூகத்தினர் மேயர் அமர்ஜித் மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தரப்பினர் மீதும் தவறு உள்ளது என்ற அடிப்படையில் மேயர் அமர்ஜித்Read More →

Reading Time: < 1 minute இஸ்ரேலில் தங்கியுள்ள கனடியர்கள் நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். விமான மூலம் இவ்வாறு கனடியர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வரும் பின்னணியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் தெல் அவீவிலிருந்து கனடியர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கனடியRead More →

Reading Time: < 1 minute அண்மையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரண்டு கனடியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இஸ்ரேலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த வேளையில், ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இரண்டு கனியர்கள் உயிரிழந்தனர். வான்கூவாரைச் சேர்ந்த 22 வயதான பென் மிஸ்ராஜி மற்றும் ஒன்றாரியோவைச் சேர்ந்த 33 வயதான அலெக்சாண்டர் லுக் ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்திருந்தனர். இஸ்ரேலில் கொல்லப்பட்ட இந்த இரண்டு கனடியர்களுக்காகவும் நினைவஞ்சலிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ராணுவப் படையினர் மத்தியில் கடுமையான வறுமை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அநேகமான படையினர் தங்களது வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்ய முடியாது அவதியறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அதிக எண்ணிக்கையிலான படையினர் உதவிகள் கோரி நிற்கும் நிலை காணப்படுவதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் Wayne Eyre தெரிவித்துள்ளார். லாப நோக்கமற்ற நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் படையினருக்கு உதவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில படையினர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் உணவு வங்கிகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. நன்றி அறிதல் வாரம் அல்லது தேங்க்ஸ் கிவிங் வாரத்தில் இவ்வாறு அதிக அளவில் உணவு வகைகளை மக்கள் நாடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண வீக்கம், வீடுகளுக்கான வாடகை கட்டண அதிகரிப்பு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணிகளினால் நாட்டில் உணவு வங்கிகளின் தேவை அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக ரொறன்டோவில் இயங்ககி வரும் ஓர் உணவு வங்கியில்Read More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்ததாகவும், 10 பேர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறு பாலமே இவ்வாற உடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய பாலம் இடிந்து வீழ்ந்த போதிலும் மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute இஸ்ரேல், காசாவுக்கிடையில் மோதல் தொடரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் காசாவில் வாழும் கனேடியர்களுக்கு கனடா எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துக்கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவரும் நிலையில், பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் என்னும் அமைப்பு, கடந்த சனிக்கிழமை காலை, காசா பகுதியிலிருந்து திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் 700க்கும் மேற்பட்டவர்கள், பொதுமக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்தார்கள். இஸ்ரேல் திருப்பித் தாக்க, காசா தரப்பில்Read More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின சமூகத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். சஸ்கற்றுவான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். போதை மருந்து பயன்பாடு தொடர்பிலான பிரகடனத்திற்கு அமைவாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய அளவில் பழங்குடியின சமூகத்தினர் போதைப் பொருள் பயன்படுத்துவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, கலாச்சார ரீதியாக, மற்றும் சுகாதார ரீதியாக போதை மருந்து பயன்பாடுRead More →

Reading Time: < 1 minute இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு கனடா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத விதமாக திடீர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல்களுக்கு கனடிய அரசாங்கமும், முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல் மீதான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ டுவிட்டரில் பதிவு ஊடாக குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையை முழுமையாக ஆதரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute உலகின் முதனிலை நகரங்களின் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த 25 நகரங்களுக்குள் ரொறன்ரோ நகரம் இடம்பிடித்துள்ளது. ரிசோசென்ஸ் கன்ஸல்டன்ஸி நிறுவனத்தினால் உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியிலான தர வரிசையில் ரொறன்ரோ நகரம் 23ம் இடத்தை வகிக்கின்றது. இந்த பட்டியலில் கனடாவின் மேலும் நான்கு நகரங்கள் முதல் நூறு இடங்களில் இடம்பெற்றுள்ளன. வான்கூவார் 50ம் இடத்தையும், மொன்றியால் 60ம் இடத்தையும், ஒட்டாவாRead More →

Reading Time: < 1 minute கனடா இந்தியா மோதல் தொடர்பில் பிரித்தானிய பிரதமருடன் விவாதித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடனும் விவாதித்துள்ளார் கனடா பிரதமர். கடந்த வெள்ளிக்கிழமை, கனடா இந்தியா விவகாரம் தொடர்பில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவிடம் தொலைபேசி மூலம் பேசியிருந்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். கனடா இந்தியா மோதல் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை பிரித்தானியா உறுதிசெய்திருந்தது. பின்னர் மீண்டும் ஞாயிற்றுகிழமை, கனடா இந்தியாவுக்கிடையிலான மோதலில் தீவிரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மத வழிபாட்டுத்தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் மத வழிபாட்டு தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீன போர் பதற்ற நிலைமைகளின் பின்னணியில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யூத மத வழிபாட்டு தலங்களும் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலங்களும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மத வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட போலீஸ் ரோந்து படையினரும்Read More →

Reading Time: < 1 minute எயார் கனடா விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறான ஒரு பின்னணியில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் தெல் அவிவிற்கான விமான போக்குவரத்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெல் அவிவிற்கும் டொரன்டோவுக்கும் இடையில் நாள்தோறும் எயார் கனடா விமானRead More →

Reading Time: < 1 minute கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக இந்த பருவ காலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டு கால பருவ காலத்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சளி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். அரசாங்க இணையதளத்தில் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பில் வேறு எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. எதிர்வரும் வாரம் முதல் அல்பர்ட்டா பிரஜைகள் பருவRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வேலை வாய்ப்பு தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடிய பொருளாதாரத்தில் 65000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.5 வீதம் என்ற அடிப்படையில் காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இந்த நிலைமை பேணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கல்வித்துறையில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பகுதிநேர வேலை வாய்ப்புகளே அதிக எண்ணிக்கையில்Read More →