Reading Time: < 1 minute

தடுப்பூசி விநியோகம் தொடர்பில் மாறுபட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் மக்கள் கவலை அடையக் கூடாது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ கோரியுள்ளார்.

Tamil Business Directory

இந்த விடயத்தில் சமஷ்டி அரசாங்கம் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பெப்ரவரி நடுப்பகுதிக்கு பின்னர் சுமூகமான நிலைமைகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பு மருந்து விநியோகத்தவர்களுடன் சமஷ்டி அரசாங்கம் தொடர்புகளைப் பேணி வருவதாகவும், விரைவில் அனைத்துக் கனடியர்களுக்கும் தடுப்பூசி என்ற இலக்கு நோக்கிய பயணம் மீள ஆரம்பிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.