Reading Time: < 1 minute

பொதுமக்களை தாக்கும் நபரை அடையாளம் காண ரொறொன்ரோ காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோருகிறது.

Tamil Business Directory

ஷெப்பர்ட்-பிஞ்ச் நிழற்சாலை மற்றும் பாதுர்ஸ்ட் தெரு-வில்சன் நிழற்சாலைப் பகுதியில் ஏராளமான தாக்குதல்கள் குறித்துத் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

தூண்டப்படாத மற்றும் வன்முறைத் தாக்குதலில் சந்தேக மனிதர் பாதிக்கப்பட்டவரை அணுகுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் தலை அல்லது முகத்தில் அடிப்பார்.

இந்த சம்பவங்கள் ஜனவரி 19, 2021 மற்றும் ஜனவரி 21, 2021 க்கு இடையில் நிகழ்ந்துள்ளன.

விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

சந்தேக மனிதரின் உயரம் சுமார் 5’8 முதல் 5’9 வரை என்று விவரிக்கப்படுகிறது. அவர் மெல்லிய முதல் நடுத்தர உருவம் கொண்டவர் என்றும் கருப்பு முடி கொண்ட 20 முதல் 25 வரை இருக்கும் உள்ளவர் என்றும் அடையாளம் கூறப்படுகிறது.

வன்முறையாளராகவும் ஆபத்தானவராகவும் கருதப்படுவதால், அவரைக் கண்டால் அவரை அணுக வேண்டாம் என்று குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் 911 ஐ அழைக்குமாறு கேட்கப்படுகின்றார்கள்.