Reading Time: < 1 minute

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஸ்குவாமிஷ் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் விழுந்து மாயமான இரண்டு பேடில்போர்டர்களை தேடும் பணி பல நாட்களுக்குப் பிறகு சோகத்தில் முடிவடைந்துள்ளது.

Tamil Business Directory

கடந்த சனிக்கிழமை பிற்பகல், மரின் மாகாண பூங்காவில் உள்ள பிரவுனிங் ஏரியில் பயணித்த இருவரும் திடீரென நீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.

அவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் மேலே வராததைக் கண்ட அங்கிருந்த சாட்சி ஒருவர் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மரின் மாகாண பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு வான்வழியாகவும், நீர்நிலைகளிலும் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.

இந்த கூட்டுத் தேடுதல் பணியில் ஸ்குவாமிஷ் தேடல் மற்றும் மீட்புக் குழு, பாதுகாப்பு அதிகாரி சேவை, தீயணைப்புத் துறை, அவசர சுகாதார சேவைகள் மற்றும் கனடிய பொலிஸ் ஹெலிகாப்டர் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டன.

தொடர்ந்து பல நாட்களாக நீடித்த இந்த தீவிரத் தேடுதலின் முடிவில், செவ்வாய்க்கிழமை அன்று ஆர்.சி.எம்.பி.யின் நீருக்கடியிலான சிறப்பு மீட்புக் குழுவினர் ஏரியின் ஆழமான பகுதியில் இருந்து மாயமான இரு பேடில்போர்டர்களின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

இக்கட்டான இந்தச் சூழலில், தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து சிறப்புப் பிரிவுகள் மற்றும் கூட்டாளி அமைப்புகளுக்கு ஸ்குவாமிஷ் ஆர்.சி.எம்.பி.யின் அதிகாரி சாஷா பேங்க்ஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.