Reading Time: < 1 minute

கனடாவின் மனிடோபா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரே இரவில் பல கோடி டாலர்களுக்கு அதிபதியாக மாறியுள்ளார்.

Tamil Business Directory

ஆனால், சுவாரசியம் என்னவென்றால் தனக்கு இந்த பிரம்மாண்ட அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்பது இன்னும் அவருக்குத் தெரியவில்லை.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘லொட்டோ 6/49 கோல்ட் பால்’ (Lotto 6/49 Gold Ball) குலுக்கலில், 46 மில்லியன் டொலர் (கனடிய டாலர்) மதிப்பிலான மாபெரும் பரிசுத்தொகையை வென்ற அதிர்ஷ்டகரமான டிக்கெட் மனிடோபாவில் விற்பனையாகியுள்ளதாக ‘லொட்டோ ஸ்பாட்’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லொட்டோ ஸ்பாட் நிறுவனத்தின் தகவல்களின்படி, இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றி பெற்ற 24182524-02 என்ற எண் கொண்ட டிக்கெட், மனிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகருக்கு வெளியே வாங்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த அதிர்ஷ்டசாலி யார் என்று கண்டறியப்படாததால், டிக்கெட் வாங்கிய அனைவரும் தங்களது எண்களை உடனடியாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்றவர் தனது பரிசுத்தொகையைக் கோருவதற்கு ஒரு வருட காலம் (1 ஆண்டு) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது பரிசை வென்றவர், தங்களின் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு லொட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை 1-800-665-3313 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.