Reading Time: < 1 minute

பாடசாலைக்கு மீள திரும்பும் திட்டத்திற்கு ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

Tamil Business Directory

ஓரளவுக்கு, ஆரம்பப் பாடசாலைகளில் இடைவெளியை அதிகரிக்க நூற்றுக்கணக்கான புதிய ஆசிரியர்களை நியமிக்க இது இருப்பு நிதியில் இருந்து பணத்தை எடுக்கும்.

இந்த திட்டத்தில் 400 ஊழியர்களை மறுசீரமைத்தல் மற்றும் கூடுதலாக 366 ஆசிரியர்களை நியமிக்கும். இந்த திட்டம் முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட மாகாண நிதியில் 6.3 மில்லியன் டொலர்களையும், சபையின் வரவு செலவு திட்டத்திர் இருந்து மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 2.9 மில்லியன் டொலர்களையும் பயன்படுத்தும். எவ்வாறாயினும், பணத்தின் பெரும்பகுதி 29.5 மில்லியன் டொலர்களிலிருந்து வரும், அது சபை அதன் இருப்பு நிதியில் இருந்து எடுக்கும்.

இந்த திட்டம் ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபைக்கு இளம் மற்றும் மூத்த மழலையர் பாடசாலையில் 26 மாணவர்கள், 1-3 வகுப்புகளில் 20 மாணவர்கள் மற்றும் 4-8 வகுப்புகளில் 27 மாணவர்கள் வரை வகுப்பறை மாணவர் வரம்பை பராமரிக்க அனுமதிக்கும். தரம் 4-8 வகுப்புகளில் மாணவர் வரம்பு இருப்பினும், கொவிட்-19 அதிக அளவில் உள்ள சுற்றுப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு 20ஆகக் குறையும்.