Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒன்றாரியோ சட்ட அமுலாக்க வரலாற்றில் மிகப்பெரிய ஃபெண்டானைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் தொடர்ச்சியான சோதனைகளால் 120,000இற்க்கும் மேற்பட்ட ஃபெண்டானைல் மாத்திரைகள் மற்றும் 70 கிலோகிராம் தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மூன்று ஆண்கள் காவலில் எடுத்து பின்னர் அவர்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருளை உற்பத்தி செய்தல், கட்டுப்படுத்தப்பட்ட பொருளை கடத்தல் மற்றும் குற்றத்தால் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இவர்கள் மூவரும் செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.




